போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர்.

சம்பவம் நடந்த இடம்

இவர்களுக்கு அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று (மார்ச் 25) இரவு இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

ஆறுமுகம் தூங்கிய நிலையில் சியாம் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்து பாட்டுக் கேட்டுள்ளார். தூக்கம் பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து சியாமிடம் ஆறுமுகம் முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதை

ஒரு கட்டத்தில் சியாம் ஆறுமுகத்தை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். ஆறுமுகத்தின் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அவர் ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார்.

ஆறுமுகம்

சியாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சியாமைத் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs