ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற நான்காம் வகுப்பு பயிலும் மாணவி, ஆட்டோ மீது டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி விலக்கு பகுதியில் பள்ளி மாணவிகள் நான்கு பேரை ஏற்றிச் சென்ற அபே ஆட்டோ, மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது உசிலம்பட்டியிலிருந்து மதுரை நோக்கி வந்த டூவீலர் ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோவின் பக்கவாட்டு பகுதி நசுங்கி, அதிலிருந்த தனியார்ப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் ரித்திகாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே மாணவி ரித்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி நகர் போலீசார் விபத்து குறித்துத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks