‘அவர் படைக்க வேண்டிய சாதனை ஏராளம்…’ – EVKS-க்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

‘வருத்தமடைகிறேன்’ – அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு E.V.K.S.இளங்கோவன் அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

‘பெருந்துயரமடைந்தேன்…பங்கெடுக்கிறேன்’ – சீமான்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்: காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

‘ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது…’ – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வெ.கி.ச இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் தந்தைப் பெரியாரின் சிலையை இளங்கோவன் அவர்களை அழைத்து தான் திறக்கச் செய்தேன். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மிகுந்த மன வேதனை அடைந்தேன்’ – விஜய் இரங்கல் 

TVK Vijay

மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மல்லிகார்ஜூன கார்கே இரங்கல்!

“ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்; காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர்” என்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தவிர்க்க முடியாத பங்களிப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் உத்வேகம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு. இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் இறப்பு செய்தியால் வருத்தமடைகிறேன். அவருடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பயமில்லா மற்றும் கொள்கை ரீதியான தலைவர். அவர் காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் லட்சியங்களின் தீவிரமாக பரப்புபவர் ஆவார். அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய சேவை எப்போதும் உத்வேகமாக அமையும்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவிதிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு, “ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் இறப்புச் செய்தியை கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். காங்கிரஸில் இருந்த போது அவரின் தலைமையிலும் கீழும் வழிகாட்டலின் கீழும் பணியாற்றியிருக்கிறேன். அவர் துணிச்சலும் நெஞ்சுரமும் மிக்கவர். ஈகோ இல்லாத பரந்த மனதோடு அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனம் படைத்தவர்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கார்த்தி சிதம்பரம் இரங்கல் கடிதம் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சார்ந்த திரு. EVKS இளங்கோவன் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நம் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நம் இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.

மனதில் பட்டதை வெளிப்படையாக அடிமட்ட தொண்டரின் மனம் கவரும் வண்ணம் பேசும் தன்மை உள்ளவர். அவரின் இழப்பு நம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பேரிழப்பே. அன்னாரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நம் இயக்க நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.