ஆன்லைன் உணவு டெலிவரியில் முன்னணியில் இருக்கும் ஸொமேட்டோ நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபிந்தர் கோயல் Zomato உணவு விநியோக தளத்தை 2008-ல் தொடங்கினார். இதற்காக, தனது MNC வேலையை விட்டுவிட்டு இந்தியாவின் உயர் அடுக்கு கோடீஸ்வரர்களில் கிளப்பில் சேர்ந்தார். தொழில் முனைவோரின் நிகர மதிப்பின் எழுச்சி zomato வில் 4.2% இருந்தது. அதன் நிகர மதிப்பு இரண்டே ஆண்டுகளில் 300% அதிகமாக வளர்ந்து, அதன் தற்போதைய மதிப்பு $1.7 பில்லியன் ஆக உள்ளது.
இந்நிலையில், ஸொமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், `ஊழியர்களுக்கான தலைவர்’ பதவி ஒன்றை புதிதாக உருவாக்கியுள்ளார். அதற்கு, சில நிபந்தனைகளை விதித்து அந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தனது X தளத்தில் அறிவித்துள்ளார்.
அதாவது, இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் கிடையாது. 2-வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும்.
அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இண்டியா (FEEDING INDIA) அமைப்புக்கு கொடுக்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்படுபவர் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இது சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது. கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். தொழில் ரீதியாக இதை உங்களுக்கு விரைவான கற்றல் திட்டமாக கருதுங்கள். நாங்கள் கற்பவர்களையே விரும்புகிறோம். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, ஸொமேட்டோவின் உயர் திட்டங்களான பிளின்கிட், ஹைபர்ப்யூர் மற்றும் பீடிங் இண்டியா ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்” என்று நிஜ-மேளாண்மை பாடத்துடன் ஒப்பிட்டு பேசினார்.
விண்ணப்பதாரர்கள் 200 வார்த்தை கொண்ட கவர் லெட்டரை நேரடியாக கோயலுக்கு சமர்பிக்குமாறு கூறியுள்ளார்.

ஸொமேட்டோ CEO -வின் இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
நெட்டிசனின் ரியாக்சன் மற்றும் கமெண்டுகள்:
இந்த அறிவிப்புக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து, குறிப்பாக நுகர்வோர் தொழில்நுட்பத் துறையில் கற்று கொள்வதற்கான அரிய வாய்ப்பாக உள்ளது என ஆதரவாளர்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், ரூ.20 லட்சம் கட்டணம் பெரும்பாலானவர்களை அணுக முடியாதவர்களாக ஆக்குகிறது. இது குறிப்பிட்ட நிதி சலுகை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
“தவறான எண்ணம், அவருக்கு சம்பளம் வழங்குங்கள் அந்த நபர் சரியானவர் அல்ல என நீங்கள் உணர்ந்தால், அவர் நிறைய பணத்தை இழக்க நேரிடும். மேலும் அவருக்கு கசப்பான அனுபவங்களை மட்டுமே பெறுவார் இளைஞர்களுக்கு பணம் தேவை, தர்மத்தின் பின் விளைவு அல்ல!” என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்க மக்களே.. உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…