வெற்றிக்குப் பின் புதினுடன் பேசிய ட்ரம்ப்… உக்ரைன் பிரச்னை தீருமா..?

கடந்த 5-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் டோனால்டு டிரம்ப்.

அதிபர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போதே, டிரம்ப் தான் வெற்றி பெற்றால் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

விளாடிமிர் புதின்!

இந்த நிலையில், செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க தேர்தல் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப்பையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். அப்போது டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு பற்றி டிரம்ப் பேசும்போது, “இந்தத் தேர்தலில் நான் வெற்றிப்பெற்றால் போரை நிறுத்துவது சம்பந்தமாக இருத்தரப்பிலும் முயற்சி எடுப்பேன். உக்ரைன் மற்றும் பிற நாடுகளும் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இவரிடமும், புதினுடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நான் வெற்றிப்பெற்றால், போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பேன். மேலும் வெற்றிப்பெற்றால், அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னரே, இதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ஏற்ப அதிபராக வெற்றி பெற்றிருக்கும் டிரம்ப், ‘உக்ரைன் மீதான போரை அதிகரிக்க வேண்டாம்’ என்று தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இருவரும் நல்ல நண்பர்கள் என்ற நிலையில், வெற்றிக்குப் பிறகு டிரம்ப் மற்றும் புதின் பேசிய முதல் போன்கால் இதுவே.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb