அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் கடந்த சில நாள்களில் மூன்று முறை பேசியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் இஸ்ரேல் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
“கடந்த சில நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்புடன் மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ஈரான் அச்சுறுத்தலில் ஒவ்வொரு அம்சத்தையும் நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம்” என்று ட்ரம்ப்புடனான உரையாடல் குறித்துப் பேசியுள்ளார் நெதன்யாகு.
மேலும் நெதன்யாகு, ‘அமைதியை நிலைநாட்டுவதற்கு இஸ்ரேல் முன்னால் இருக்கும் வாய்ப்புகள்’ குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.
ஈரான் உடனான போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் உலக அரசியலில் மிக முக்கியமானதாப் பார்க்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி இஸ்ரேல் பிரதமருக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருந்திருக்கும் என்கின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.

ட்ரம்ப் கடந்த முறை ஆட்சி செய்தபோது ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை அமைத்தார். அதன் திறப்பு விழாவில் அவரது மகள் இவான்கா ட்ரம்ப் கலந்துகொண்டார். ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய நாட்டின் பகுதியான கோலன் குன்றுகள் மீது இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரித்தார். இஸ்ரேல் மற்றும் பிற அரபு நாடுகள் இடையேயான கூட்டுறவை வளர்க்கும் முயற்சிகளிலும் உதவினார்.
ட்ரம்ப் அரசு தீவிர இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதனால் காசா மீதான தாக்குதல், லெபனான், ஈரான் மீதான போர்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வரும் ஜனவரி 20-ம் தேதி அதிபராக ட்ரம்ப் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb