தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. ஆனாலும், தி.மு.க கூட்டணியில் விரிசலா, அ.தி.மு.க மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணியா என்ற பேச்சுகள் இப்போதே எழுத் தொடங்கிவிட்டன. இத்தகைய சூழலில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

அதில், அ.தி.மு.க தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்துச் செயல்படுவோம். பா.ஜ.க இல்லாத கூட்டணிக்கு அ.தி.மு.க தயாரா என்றும் கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது.” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு தொடரும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த பேசிய ஜெயக்குமார், “அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் எந்தக் காலத்திலும் மறைமுகக் கூட்டணி கிடையாது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் நேற்று பொதுச் செயலாளர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பா.ஜ.க-வைத்த தவிர்த்து, தி.மு.க-வை வீழ்த்த ஒத்த கருத்துடையவர்கள் எங்களுடன் வரும்போது அதுபற்றி கட்சி முடிவு செய்யும். இதனைத் திசைதிருப்பி விவாதப்பொருளாக்கி ஆதாயம் தேடும் முயற்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இந்த நிலைப்பாடு தொடரும். எதிர்காலத்திலும் இது தொடரும்.” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb