பீகார் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் ஒருவர் பிரித்துக் கொண்டிருக்கும்போது, முன்னோக்கி செல்ல வேண்டிய இன்ஜின் பின்னோக்கி வந்ததால், அதில் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதற்கு அவருக்கும், இன்னொரு ரயில்வே ஊழியருக்கும் சரியாக இல்லாத தகவல்தொடர்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
आम लोग कब safe होंगे, मोदी जी? आप तो बस ‘एक’ अडानी को safe करने में लगे हुए हैं।
ये भयावह तस्वीर और खबर भारतीय रेल की लंबी लापरवाही, उपेक्षा और जान बूझकर की गई कम भर्तियों का परिणाम है। pic.twitter.com/JEfiMXvY53
— Rahul Gandhi (@RahulGandhi) November 9, 2024
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பொது மக்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் மோடி ஜி? நீங்கள் ‘ஒரு’ அதானியை பாதுகாப்பதிலேயே பிசியாக இருக்கிறீர்கள்.
இந்த புகைப்படம் மற்றும் செய்தி உங்களுடைய நீண்ட கால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் இந்திய ரயில்வேயில் குறைவான ஆட்சேர்ப்பு ஆகியவற்றை காட்டுகிறது” என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.