‘விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவியா?’ – தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் விளக்கம்

அடுத்தடுத்து உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று அந்தக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆண்டுதோறும் விஜயகாந்த் மறைவு தினம் அன்று அஞ்சலி, பூரண மதுவிலக்கு, சொத்துவரி உயர்வுக்கு கண்டிப்பு என 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜயபிரபாகரன்

பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசிய பின்னர், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து பேசினார். “விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவருக்கு கட்சி பதவி கொடுப்பது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

மேலும் செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு மட்டுமல்லாமல், இன்னும் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.