ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 2004-ம் ஆண்டு வால்டாய் விவாத மன்றம் தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டி,“ரஷ்யாவுடன் கூட்டணியில் இல்லாத நாடுகளை ரஷ்யா எப்போது எதிரியாக நினைத்ததில்லை. ரஷ்யா சுதந்திரமாக செயல்படவே விரும்புகிறது. இந்த உலகுக்கு ரஷ்யாவின் பங்களிப்பு அவசியம். உலகை தங்கள் விருப்பப்படி மாற்ற விரும்பும் மேற்கத்திய நாடுகளால்தான் உக்ரைன், இராக், லிபியா உள்ளிட்ட அனைத்து போர்களும் நடந்துவருகிறது.

இந்தியா ரஷ்யா இடையே நீண்டகாலமாக நட்புறவு நீடிக்கிறது. இது எப்போதும் நீடிக்கும் என்றே நம்புகிறேன். உலக அரங்கில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் வளர்ச்சியும், கலாச்சாரமும் அதன் வளமான எதிர்காலம் குறித்த பார்வையை முன்வைக்கிறது. அதனால், இந்தியாவை வல்லரசு நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியாவுடன் பல்வேறு பணிகளில் ரஷ்யா இணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு ரஷ்யாதான் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது.
ஆயுத விற்பனையோடுமட்டும் நிற்காமல், ஆயுத உற்பத்தியிலும் இணைந்து செயலாற்றி வருகிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பிரம்மோஸ் ஏவுகணையை குறிப்பிடலாம். தொடர்ந்து இந்தியாவுக்கு கச்ச எண்ணெய் , எரிவாயு , வேளாண் துறைக்குத் தேவையான உரங்கள் என இந்தியாவுக்குத் தேவையானதை தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம். இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னைகள் இருப்பது உண்மைதான். இரு நாடுகளை சேர்ந்த சாதுர்யமான தலைவர்கள் இதற்கு உரிய சமரச தீர்வை காண்பார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb