தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநரை குறை சொன்ன நீங்கள் பாடாமல் விட்டது நியாயமா? -தமிழிசை கேள்வி!

கோவையில் கடந்த செவ்வாய்கிழமை இரண்டு அரசு விழாக்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த இரு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னாள் ஆளுநரும் பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே குறைப்பது நியாயமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவரது பதிவில், “தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே… அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள், உங்கள் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.

குறை இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர. தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே குறைப்பது நியாயமா… பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா? குறையோடு பாடுவது அநீதி… அதற்காக..பாடாமல் இருப்பது நீதியா?…” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

சமீபத்தில் ஆளுநர் கலந்துகொண்ட ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்” என்ற வரி விடுபட்டதை திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது அது பாடியவர்களின் குறை என்றுக் கூறப்பட்டது. ஆனாலும் ஆளுநர் குறிப்பிட்டு சில வரிகளை புறக்கணித்தாகவே விமர்சிக்கப்பட்டது. ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இதனைக் குறிப்பிட்டே தமிழிசை சௌந்தரராஜன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சில பாஜகவினரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb