கைம்பெண் சான்று பெறுவதில் சிக்கல்; கோரிக்கை வைத்த சு.வெங்கடேசன்; தீர்த்து வைத்த தமிழக அரசு

ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதில் பொருத்தமற்ற நிபந்தனைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியதை ஏற்று புதிய சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது.

புதிய உத்தரவு

இதுகுறித்து சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்னைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொறுத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்காணி அவர்கள், எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

புதிய உத்தரவு

அதன்படி, ‘ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல’ எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்னை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்குப் பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs