தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், மாலை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். மிகவும் ரகசியமாக நடந்த இக்கூட்டத்தில் நிர்வாகிகளின் செல்போன் அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்களுக்கும் அனுமதியில்லை.
கூட்டத்தில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பகுதி மற்றும் வார்டு செயலாளர்கள், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் ஸ்டாலின் சுமார் அரை மணி நேரம் உரையாடினார். பேரூர் கழகம் முதல் மாநகர் வரை என்ன பணிகள் நடந்துள்ளன, என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்ற புள்ளி விவரங்களுடன் பேசியுள்ளார் என்கிறார்கள்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் வரவேற்பை பார்க்கும்போது,

2026 தேர்தலிலும் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.” என்றார். இதே பாணியில் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு சென்று நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின், அங்கிருந்த அனைத்து நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துள்ளார். பிறகு நிர்வாகிகளுக்கு தடபுடல் அசைவ விருந்தும் படைக்கப்பட்டுள்ளது.

மட்டன் பிரியாணி, மட்டன் க்ரேவி, கோலா உருண்டை, பன் பரோட்டா, சிக்கன் க்ரேவி, ரசம், தயிர் உள்ளிட்டபரிமாறப்பட்டது. அசைவம் விரும்பாதவர்களுக்கு தனியாக சைவ உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY