பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை இயற்ற வேண்டி நேற்று (நவம்பர் 3) எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசும்போது, “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிர்களுக்குத் தெலுங்கு பேசியவர்கள் சேவை செய்தனர். அவர்களெல்லாம் தற்போது தமிழ் எங்கள் இனம் எனக் கூறி வருகிறார்கள். எப்பொழுதோ வந்த பிராமணர்களைத் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? பிராமணர்கள் தமிழர்கள் இல்லையென்றால் வேறு யார் தமிழர்கள்?” எனப் பேசியது சர்ச்சையானது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “அமரன் படத்தில் முகுந்த வரதராஜனை பிராமணராகக் காட்டாதது ஏன்?” என்று கேட்டிருந்தார் நடிகை மதுவந்தி.
இன்று (நவம்பர் 4) இந்த சர்ச்சைக்குச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவர், “தமிழ்நாட்டில் வாழ்ந்த முகுந்த் வரதராஜன், உ.வே. சாமிநாத ஐயர், பாரதியார், ராஜாஜி போன்றவர்களைத் தமிழர்கள் இல்லை எனப் பேசுபவர்கள் தமிழனா என்று கேட்டேன். கேப்டன் கோபிநாத்தை மாறன் எனப் பெயர் மாற்றி , அவருடைய அடையாளத்தை மாற்றி படத்தில் காட்சிப்படுத்தினார்கள். ஆனால், வில்லனை மட்டும் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்சிப்படுத்துகிறார்கள்.

இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் இல்லை எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அமைச்சரவையில் பிராமணர்கள் இருக்கவே கூடாது எனச் சொல்லத் தெரிந்தவர்களுக்குத் தமிழர்களுக்கு மட்டும்தான் இங்கு இடம் கொடுக்கப் போகிறோம் என ஏன் கூறவில்லை. அப்போது அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
ஆனால், பிராமணர்களை மட்டும் தள்ளி வைத்துவிடுகிறீர்கள். இப்படியும் பேசி அப்படியும் பேசினால் அது பெயர் பாசாங்குத்தனம். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கும் பொறுப்பு கொடுப்பவர்கள்…. நீங்கள் அடையாளப்படுத்துவது போலவே ஆரிய வந்தேறிகளுக்குப் பொறுப்பளியுங்கள். தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ஆடிட்டர், மருத்துவர்கள் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பிராமணரல்லாத அமைச்சரவை எனக் கூறி ஏமாற்றுகிறார்கள். ஒரு சமூகத்தினரை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள்.

அவர்களும் அனைவரை போலத்தான் பூமியில் பிறந்தார்கள். எங்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்காமல் நாயுடு சமூகத்தினருக்கு இடமளித்தால் கேள்வி கேட்கத்தான் செய்வோம். தெலுங்கு மக்களுக்கு எதிராக கஸ்தூரி பேசியதாகக் கூறப்படும் அப்பட்டமான பொய்யை யாரும் நம்ப வேண்டாம். உண்மை கால் வைத்து நடந்து செல்வதற்குள் பொய் சிறகுகளை வைத்துப் பறந்து உலகத்தைச் சுற்றிவிடும். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. நான் ஒரு பிராமணர் என்பதால்தான் இப்படியான பொய்களைக் கூறுகிறார்கள்.” என ஆவேசமாகப் பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb