Tvk : `தவெக கட்அவுட்ல இருக்குற வேலுநாச்சியார் படத்தை வரைந்ததே நான்தான்…’ – சீமான்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியல் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். முன்னதாக, “சாம்பார் என்று சொல்லுங்கள் அல்லது கருவாட்டுக் குழம்பு என்று சொல்லுங்கள் அது என்ன சாம்பார்கருவாட்டுக் குழம்பு… ஒன்று திராவிடம் அல்லது தமிழ் தேசியம் எதாவது ஒரு கொள்கைக்கு வரவேண்டும்” என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று சென்னை பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “72 வயதில் திருமணம் செய்துகொண்ட பெரியாரிடமிருந்து பெண் உரிமை குறித்த கருத்துகளை எடுக்கிறார். வேலுநாச்சியார் கட்அவுட் வேண்டுமானால் வைக்கலாம். அவருக்கு வேலுநாச்சியார் யார் என்று தெரியுமா?

TVK மாநாடு

நான் மட்டும் வரவில்லை என்றால் வேலுநாச்சியார், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், முத்தரையர், அஞ்சலை, சேர, சோழ, பாண்டியன் என யாரைப் பற்றியும் தெரியாமலே போயிருக்கும். நீங்கள் வைத்திருந்த அந்த கட்அவுட் படம் நான் வரைந்தது. அரசு என்ற ஓவியரிடம் நான் வரையச் சொன்னேன். அதனால் அவர் வரைந்தார். நான்தான் வரையவைத்தேன். பெண்ணிய உரிமையை வேலுநாச்சியாரிடம் கற்றுக்கொள்ளுங்கள்” எனப் பேசியிருக்கிறார்.