தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
கட்சியின் கொள்கைப் பாடலையும், செயல்திட்டங்களையும் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்கள். மாநாட்டில் பேசிய விஜய் தன் அரசியல் எதிரிகள் குறித்துக் குறிப்பிட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
இத்தனை ஆண்டுகளாக நடிகர் விஜய்யாக மேடை பேச்சுகளில் அனல் பறக்க செய்தவர் முதல் முறையாக நேற்று கழகத் தலைவராக உரையாற்றியிருந்தார். இவரது இந்த பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்களும் நடிகர்களும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அவர், “துறவிகளும் சித்தர்களும் அதிகம் வாழ்ந்த தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
My Heartfelt Congratulations!! to Thiru @actorvijay avl, for embarking on a political journey in Tamilnadu, the land of Saints & Siddhars.
— Pawan Kalyan (@PawanKalyan) October 28, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் விஜய் பேசிய சில விஷயங்களை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அவர், ” ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என பதிவிட்டிருக்கிறார்.