நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
காங்கிரஸ், கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க., என வயநாடு தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

பா.ஜ.க., தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார். அரசியல் பாரம்பரியம் கொண்ட நேரு குடும்ப வாரிசான பிரியங்கா காந்தி முதல் முறையாகத் தேர்தல் அரசியலில் போட்டியிடுவது அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு வயநாட்டில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட பேரணியில் பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். அடுத்த 10 நாட்களுக்கு வயநாட்டில் தங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY