கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது… 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார்.  இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பது தெரியவந்தது.

கோவை கார் வெடிப்பு

இவ்வழக்கில் ஏற்கெனவே 14 பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அரபுக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த அபூ ஹனிபா மற்றும் பவாஸ் ரஹ்மான், சரண் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இவர்கள் ஜமேஷா முபினுக்கு பொருளாதார உதவி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தங்களையும் பரப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் என்ஐஏ அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர். இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பிறகு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

கைது

இதன்மூலம் கோவை  கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88