“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ” நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்திருக்கிறது. ஒரு சில இடங்களில் 30 செ.மீ வரை மழை பதிவாகி இருந்திருக்கிறது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே கட்டப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தி இருக்கின்றனர்.

அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.