கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகதல் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இதற்காக செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கோவை வந்தார். இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் திமுக நிர்வாகிகள் நிழல் போல பின்தொடர்ந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் திமுக நிர்வாகிகள் கூட்டமே அதிகம் தென்பட்டது.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவரின் இருக்கைக்கு பின்னால் யார் நிற்பது என்பதில் திமுக நிர்வாகிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது.
செந்தில் பாலாஜி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, திமுக நிர்வாகிகள் அவரின் இருக்கைக்கு பின்னால் நின்று காத்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்ல.. செல்ல திமுக நிர்வாகிகளிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஆண் நிர்வாகிகள், பெண் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “இங்க எங்கய்யா இடம் இருக்கு.. தள்ளாதீங்க” என்று வாக்குவாதம் செய்து கொண்டே தள்ளு முள்ளு முற்றியது. செந்தில் பாலாஜியே அந்தக் கூட்டத்தில் சிக்கி வருவதற்கு சிரமப்பட்டார்.
அதேபோல மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரும் கூட்டத்தில் சிக்கி தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs