இஸ்ரேல் வான் படையை மேலும் பலப்படுத்த ஏவுகணை தடுப்பும், அமெரிக்க வீரர்களையும் இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளது அமெரிக்கா.
இது குறித்து, அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 13-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான ஈரானின் எதிர்பாராத தாக்குதலையொட்டி, இஸ்ரேல் வான் படையை பலப்படுத்த THAAD (Terminal High-Altitude Area Defense) என்னும் பேட்டரியையும், அதை இயக்கும் அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் படி, இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளோம். இந்த பேட்டரி இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தும்.
இந்த நடவடிக்கை இஸ்ரேல் பாதுகாப்பில் அமெரிக்காவிற்கு இருக்கும் உறுதிப்பாட்டை காட்டுகிறது. மேலும், இது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கர்களை காக்க எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.—————————————————————————————–

THAAD பேட்டரியை இஸ்ரேலில் அமெரிக்கா அமைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு வான் பாதுகாப்பு பயிற்சிக்காக இந்த பேட்டரியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கும் அமெரிக்க வீரர்களை காப்பதற்காக அமெரிக்க அதிபர் அங்கே THAAD பேட்டரியை அனுப்ப உத்தரவிட்டிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
THAAD என்பது தன்னை சுற்றி 150 – 200 கிலோமீட்டர்களுக்குள் வரும் சிறிய மற்றும் நடுத்தர ஏவுதணைகளை கண்டுபிடித்து அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு ஆகும். THAAD அமைப்பு முதலில் தனது ரேடார் மூலம் தன் எல்லைக்குள் வரும் ஏவுகணையை கண்டுபிடிக்கும். பின்னர், அந்த ஏவுகணையை குறிப்பார்த்து, ஒரு டிரக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஏவுதளத்தில் இருந்து எதிர் ஏவுகணையை அனுப்பி, குறித்த ஏவுகணையை அழிக்கும்.