சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் விற்பனை – தஞ்சை இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம் பட்டதாரியான இவர் முனைவர் பட்டம் வாங்குவதற்கு படித்து வந்ததாக சொல்லபடுகிறது. இந்நிலையில் இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறுவர், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு 2023 -ம் ஆண்டில் தகவல் வந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விக்டர் ஜேம்ஸ் ராஜா

இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 18 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இணையதளத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த 2023, மார்ச் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து 16 ஆம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் விற்பனை செய்த ஜேம்ஸ் விக்டர் ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 6.54 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 1 சிறுவர், 2 சிறுமி என மூன்று பேருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88