விதவிதமாக வித்தியாசமாக..! – திருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்கம் கடத்தல்!

திருச்சி டு புதுக்கோட்டை சாலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளில் பலர் நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் பயணித்த ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

தங்கம் கடத்தல்

அவர்மீது சந்தேகமடைந்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில் அவர் முழங்காலில் அணிந்திருந்த knee cap – ல் பேஸ்ட் வடிவில் ரூ.1.16 கோடி மதிப்பிலான 1.605 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தரும் விமானங்களில் விதவிதமான ஸ்டைல்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88