Tamil News Live Today: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்..!

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்..!

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு உருவாக்கியிருந்தது.. அந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை 1-ம் தேதி, அதாவது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 2019-ம் ஆண்டு, இரண்டாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. 

குற்றவியல் சட்டங்கள்

முன்னதாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களை பின்பற்றப்பட்டு வந்தது. அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்’ என பெயரிடப்பட்டு, அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88