கள்ளச்சாராயமா… மதுவா..? பொள்ளாச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 பேர்; காவல்துறை விளக்கம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச்  சேர்ந்த ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், லட்சுமணன், ராமகிருஷ்ணன், மற்றொரு செந்தில்குமார், மகேந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி

இந்நிலையில் நேற்று ரவிச்சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். மகேந்திரனுக்கு வயிற்றுப்போக்கு, உடல்நடுக்கம், உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து  பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் மாவடப்பு என்ற கிராமத்தில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததாக தகவல் வெளியானது.

காவல்துறை விசாரணை

இதையடுத்து மாவடப்பு, திருமூர்த்திமலை, குழிப்பட்டி ஆகிய கிராமங்களில் வனத்துறையுடன் இணைந்து காவல்துறை சோதனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “ரவிச்சந்திரன் மற்றும்  மகேந்திரனுக்கு மட்டும்உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ரத்தத்தில் மெத்தனால் கலக்கவில்லை. கள்ளச்சாராயம் என்பது வதந்தி. எல்லோரும் ஒன்றாக மதுஅருந்திய அடுத்தநாள், ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் மட்டும் தனியாக மது அருந்தினர். அப்போது அருகில் இருந்த தொட்டியில் இருந்தத் தண்ணீரை கலந்து குடித்துள்ளனர்.

விசாரணை

அது உள்ளூர் பஞ்சாயத்து சார்பில் கொசு மருந்து கலக்க பயன்படுத்தப்படும்  தண்ணீர். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். தற்போது நலமாக உள்ளனர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88