ஜூ.வி. செய்தி எதிரொலி: தாராபுரத்தில் மண் கடத்திய லாரிகள் பறிமுதல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து அதிக அளவில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர்ப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கட்ட அடித்தளம் போடுவதற்கும், வீட்டுமனைப் பிரிவுகளை சமப்படுத்துவதற்கும் ஒரு லோடு லாரி ரூ.7000 முதல் ரூ.10000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆளுங்கட்சி நிர்வாகிகள் காவல் துறை, கனிமவளத் துறை மற்றும் வருவாய்த் துறை ஒத்துழைப்பில் இந்த மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் கடந்த வாரம் மண் கடத்தல் தொடர்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதுதொடர்பாக ஜூனியர் விகடனில் “ஆளுங்கட்சி பலம்… அதிகாரிகள் கூட்டு… தாராபுரத்தில் ஜோராக நடக்கும் மண் கடத்தல்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

பறிமுதல்

இதைத் தொடர்ந்து, தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தலைமையில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் அலங்கியம் காவல் துறையினர் கொண்ட குழுவினர் அலங்கியம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வட்டமலை புதூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்துக் கொண்டிருந்த 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88