திருப்பூர்: வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை – மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி, இவரின் மனைவி பிரியா. இத்தம்பதி திருப்பூர் அவிநாசி நகர் பகுதியில் தங்கியுள்ளனர். பாபி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரகல்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிரகல்யா பாத்ரூமில் பாதி அளவு தண்ணீர் இருந்த வாளிக்குள் தலை குப்புறக்க விழ்ந்துள்ளது. நீண்ட நேரமாகியும் குழந்தையின் சத்தம் கேட்காததை அடுத்து தாய் பிரியா குழந்தையைத் தேடியுள்ளார். அப்போது, பாத்ரூமில் இருந்த வாளிக்குள் குழந்தை பிரகல்யா விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரகல்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரகல்யா

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் வாளிக்குள் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88