Tamil News Live Today: கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு.

திருச்சி: கள்ளச்சாராயம் அழிப்பு..!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றிஅழித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது. அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88