திருச்சி: மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் – தம்பியை ராடால் அடித்துக் கொன்ற அண்ணன் – நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி எம்.டி சாலையைச் சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருக்கு கோவிந்தராஜ், குமரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், கோவிந்தராஜ் (52) துவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல், அவரின் தம்பியான குமரன் (43) துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இருவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் சமைத்துச் சாப்பிட்டு ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு, சமைத்து சாப்பிடும் போது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்னை கடும் வாக்குவாதமாகவும் மாறியிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், குமரனை இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குமரன்

இதில், சம்பவ இடத்திலேயே குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி துவாக்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திவர்கள், குமரன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுபோதையில் தனது தம்பியை அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88