Suresh Gobi: `எனக்கு அமைச்சர் பதவியில் விருப்பமில்லை’ – பதவியேற்ற மறுநாளே விலக சுரேஷ் கோபி விருப்பம்

3-வது முறையாக நாட்டின் பிரதமராக, பதவியேற்றிருக்கிறார் மோடி. அவருடன் 71 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் ஒருவர் கேரள மாநிலத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி(Suresh Gobi). அதைத் தொடர்ந்து, திருச்சூருக்கு மத்திய அமைச்சர் என்ற மோடியின் உத்தரவாதத்தின் அடிப்படையில், கேரளாவிலிருந்து பா.ஜ.க சார்பில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன், சுரேஷ் கோபி என இருவர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சுரேஷ் கோபி

இதில் பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடந்து, நேற்று பதவி பிரமாணமும் நடந்தது. இந்த நிலையில் மலையாள செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அமைச்சர் சுரேஷ் கோபி,“நான் எம்.பி-யாக பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அதில் எனக்கு விருப்பமில்லை என்று கட்சியிடம் கூறியிருந்தேன்.

நான் விரைவில் அமைச்சரவையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைவேன் என்று நினைக்கிறேன். திருச்சூர் மக்களுக்காக எம்.பி.யாக சிறப்பாக செயல்படுவேன். எனக்கு படங்களில் நடிக்க ஆசை. நடிக்க ஆர்வமாக இருப்பதால் திரையுலகத்தை விட்டு விலக மாட்டேன். ஆனால், அது தொடர்பாக கட்சி முடிவு செய்யட்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88