Soori: “கதை நாயகனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு; இந்த பாதையிலேயே போவோம்..” – சூரி பேட்டி

நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கருடன் திரைப்படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண தன் சொந்த ஊரான மதுரையிலுள்ள கோபுரம் திரையரங்கிற்கு நடிகர் சூரி வருகை தந்தார்.

‘கருடன்’

ரசிகர்கர்களின் வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “நல்ல படத்தை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். பெண்கள், குழந்தைகள் கருடன் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். தொடர்ந்து மக்களுக்கு நல்ல சினிமாக்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

நான் எப்போதும் கதைநாயகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காமெடி ரோலில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாரும் அழைக்கவில்லை, அப்படி வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயாராக உள்ளேன்.

சூரி

விடுதலை பாகம் – 2 விரைவில் வெளியாகும். கதை நாயகனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த பாதையிலேயே போகலாம் என நினைக்கிறேன்” என்றார்.