மோடி மூன்றாவது முறை பெரும்பான்மையுடன் பிரதமர் இருக்கையில் அமர்வார் என நினைத்திருந்த நிலையில், 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி பெரும்பான்மையை இழந்திருக்கிறது பா.ஜ.க. தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி. அதைத் தொடர்ந்து, 232 இடங்களில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் நுழைகிறது.
இந்த நிலையில், நேற்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டதுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “எங்கள் கூட்டணிக்குக் கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணி அங்கத்தினர் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பா.ஜ.க-வுக்கும், அவர்களின் வெறுப்பு அரசியல், ஊழல், பணமதிப்பிழப்பு ஆகிய மக்கள் விரோத செயலுக்கும் மக்கள் தகுந்த பதிலை அளித்திருக்கின்றனர். இது பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மற்றும் தார்மீக தோல்வியாகும்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தன் ஆதரவானவர்களுக்காக செயல்படும் குரோனி முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் விதிக்கப்பட்ட ஆணை. மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். பா.ஜ.க ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்பதே எங்களது முடிவு.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb