டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மனீஷ் சிசோடியா, ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை விசாரணையில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கல்வகுந்த்லா கவிதா – பி சரத் சந்திர ரெட்டி

2021-22-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி அரசால் டெல்லி மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, டெல்லியில் மதுபான உரிமம் வழங்கும் செயல்முறையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது. இதில், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த பல நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியது. அதன் தொடராகத்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.சி-யுமான கவிதா கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்தல் பத்திர விவரங்கள் இந்த வழக்கு தொடர்பாக ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்துகிறது.

அதாவது கவிதாவுடன் இணை குற்றம் சாட்டப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34.5 கோடி பா.ஜ.க-வுக்கு வழங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.

கவிதாவுடன் இணை குற்றம் சாட்டப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34.5 கோடி பா.ஜ.க-வுக்கு வழங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி, அவரின் தந்தை பிவி ராம் பிரசாத் ரெட்டியால் நிறுவப்பட்ட அரபிந்தோ பார்மா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர்.

பிரதமர் மோடி

இவர் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் நவம்பர் 11, 2022 அன்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 10-வது நாள், அதாவது நவம்பர் 21, 2022 அன்று அவரது நிறுவனமான அரபிந்தோ பார்மா வாங்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க-வின் கணக்கில் பணமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி ஜூன் 2023 -ல் அப்ரூவராக மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் நவம்பர் 2023-ல் அரபிந்தோ பார்மா நிறுவனம் பா.ஜ.க-வுக்கு மேலும் ரூ.25 கோடி கொடுத்திருக்கிறது. அதாவது, அரபிந்தோ பார்மா லிமிடெட் நிறுவனம் வாங்கிய ரூ.52 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் ரூ.34.5 கோடி பா.ஜ.க-வுக்கும், ரூ.15 கோடி பாரத ராஷ்டிர சமிதிக்கும், ரூ.2.5 கோடி தெலுங்கு தேசம் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.