இன்று தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள தி.மு.க வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அருண் நேரு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க-வின் பவர் சென்டரான அமைச்சர் கே.என்.நேருவின் மகனான இவர், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. இதுவரை நேரடி அரசியலில் ஈடுப்பட்டதில்லை. இந்நிலையில், அவர் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி, திருச்சி மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “அருண் நேரு, அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கட்டட மேலாண்மை (எம்.எஸ்) படிப்பை முடித்தவர். அதன்பிறகு, விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம் உள்ளிட்ட தொழில்களைக் கவனித்த வந்த அருண் நேருவை, கடந்த சில வருடங்களாக நேரு ஆதரவாளர்கள் பிறந்தநாள் உள்ளிட்ட சமயங்களில் பிரமாண்டமாக போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கே.என்.நேருவுக்கு போட்டியாக அன்பில் மகேஸ் களமிறக்கப்பட்டதால், நேரு தரப்பு அருண் நேருவை ‘ஃபோகஸ்’ செய்ய ஆரம்பித்தது. ‘வருங்காலமே…’ என்றெல்லாம் குறிப்பிட்டு ஃப்ளெக்ஸ் வைக்க ஆரம்பித்தார்கள். கடந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களின் போதே இவர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இருந்தாலும், கே.என்.நேரு திருச்சியில் செய்ய வேண்டிய விசயங்களை கட்சி, நிர்வாகம் என்று இரண்டு மட்டத்திலும் ‘நிழலாக’ அருண் நேரு செயல்பட்டு வந்தார். இந்த சூழலில்தான், ‘அது சர்ச்சையாக மாறுவதற்குள் நேரடி அரசியலுக்குள் மகனை கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று அமைச்சர் கே.என்.நேரு நினைத்தார். அதன்காரணமாகவே, கட்சி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி, தனது மகன் அருண் நேருவை பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக்க வைத்திருக்கிறார்” என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY