வேலூர் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பாச்சி சதீஷ்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து திடீரென விலகிக்கொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘அரசியலுக்கு வந்ததில் இருந்து தேவையில்லாத பிரச்னைகளும், தேவையில்லாத விமர்சனங்களும் என்னை நோக்கி வந்துக்கொண்டே இருக்கின்றன. நான் எதைச் செய்தாலும் ‘அது தவறு’ என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத விரோதமும் உருவாகிறது. எல்லோரும் ஒரு விஷயத்தை கேட்பார்கள். அதையே நான் கொஞ்சம் வேகமாக கேட்பேன். நான் நார்மலாக பேசுவதே அப்படித்தான். ஆனால், நான் கோபப்படுவதாக பலர் நினைக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கின்றேன். வேறு எந்தக் கட்சியிலும் போய் சேரமாட்டேன்.
எதிர்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன். இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வார்டு பணிகளை மட்டுமே கவனிக்க விரும்புகிறேன். இது, எந்த சொந்த முடிவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில்தான் வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் மம்தா குமார் என்பவரும் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தரப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வேலூர் மாநகர தி.மு.க-வினருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருந்தார். ‘மக்கள் சேவையில் ஏ.சி.எஸ்’ என்ற வாசகத்துடன் ஏ.சி.சண்முகம், தாமரைச் சின்னம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும் டி-சர்ட்டை கவுன்சிலர் மம்தா குமார் அறிமுகப்படுத்துவதைபோன்ற படங்களும் வெளியாகியிருந்தன. பின்னர் அவர் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க-வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கும் ஆண் கவுன்சிலராலும் மாநகர தி.மு.க-வும், மாமன்றமும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY