நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அவிநாசி தொகுதிக்கு ரூ.40 கோடிக்கு டைட்டல் பார்க், ரூ.5 கோடிக்கு அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, ரூ.6 கோடி மதிப்பில் வணிக வளாகம், ரூ.45 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, ரூ.1.25 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தப் பணிகள் அனைத்தும் நடந்து முடியும் தருவாயில் உள்ளது. அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 4-ஆவது குடிநீர் திட்டம் விரைவில் முடிய உள்ளது.
அந்த திட்டத்தில் இருந்து இதற்கு கூடுதலாக குடிநீர் பெற்று பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியின்போது அதிமுக அவசர கதியில் தொடங்கியது. அதனால்தான், இந்த திட்டத்தை முழுமை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விடுபட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வேன். போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY