நீலகிரி மாவட்டத்தில் தொழிற் தேயிலை கூட்டுறவுத்துறையின் கீழ் இண்ட்கோசர்வ் எனப்படும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் புதிய உபகரணங்களைப் பொருத்தி நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில்,

அமைச்சர் அன்பரசன்

நவீனப்படுத்தப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளின் திறப்பு விழா குன்னூரில் உள்ள உபாசி அரங்கில் இன்று நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறு,குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையேற்று தேயிலை தொழிற்சாலைகளுக்குன பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் அன்பரசன் , “தொழில்துறையைப் பொறுத்தவரை தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தற்போது பல்லாயிரக்கணக்கான புதிய தொழில் முனைவோர்கள் நாள்தோறும் உருவாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலின மக்கள் அதிக அளவில் தொழில் முனைவோர்களாக முன்னேறி வருகிறார்கள். இது தி.மு.க ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அன்பரசன்

தொழில்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளுமே முதல்வரின் முயற்சியால் பல்வேறு உச்சத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை 90 சதவிகிதத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கல்வித்துறை முதல் மக்கள் நல்வாழ்வுத்துறை வரை மிகச்சிறப்பாக செயல்படுவதால் ஒன்றிய அரசே நம்மை அழைத்து விருது வழங்குகிறார்கள்.இதனால் மக்கள் மத்தியில் இந்த ஆட்சிக்கு பேராதரவு இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.