பிரதமர் மோடி கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட மோடி, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகின்ற ஆட்சி நடக்கிறது என்றும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா மட்டுமே என்றும் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய அதிமுக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களைச் சொல்லி தங்களின் வாக்குகளைப் பிரித்து வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தில் மோடி இவ்வாறு பேசியிருப்பதாக விமர்சித்தது.
அதைத்தொடர்ந்து, மோடியின் இத்தகையப் பேச்சு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருப்பது?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டது
கேள்விக்கு, `மனதிலிருந்து பேசியிருக்கிறார், அதிமுக வாக்கு வங்கியை குறிவைக்க, அதிமுகவை கூட்டணி அழைக்க’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக `72 சதவிகிதம் பேர் மோடி புகழ்ந்து பேசியிருப்பது அதிமுக வாக்கு வங்கியைக் குறிவைக்க’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `15 சதவிகிதம் பேர் அதிமுகவை கூட்டணி அழைக்க’ என்றும், 13 சதவிகிதம் பேர் மனதிலிருந்து பேசியிருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY