கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Myv3ads நிறுவனம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஏற்கெனவே வீடியோ பார்த்தால் பணம் என்று மக்களிடம் ஆசை வார்த்தை சொல்லி பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவது, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் அந்நிறுவனம் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து அந்த நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் Myv3ads நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்நிறுவனத்தின் நிறுவனர் குருஜி என்றழைக்கப்படும் விஜயராகவன் என்பவர் லைம் லைட்டுக்கு வந்தார். அவர் மீதும் ஏராளமான புகார்கள் வைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு V3OnlineTV நடத்தி மோசடியில் ஈடுபட்டது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படித்திருப்பதாக போலி சான்றிதழ் வைத்து மாத்திரைகள் தயாரித்தது என்று பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
இதனிடையே போலி சான்றிதழ் விவகாரத்தில் அவரை மதுரையில் வைத்து போலீஸ் கைது செய்தனர். அப்போது நெஞ்சுவலி என்று கூறியவரை மருத்துவமனையில் சோதனைக்கு அனுமதித்தனர்.
அதில் அவருக்கு உடல் நிலையில் எந்த ப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவை அழைத்து வரப்பட்டார். போலீஸ் விசாரணையில், தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் போலீஸ் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நலம் நன்றாக இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் விஜயராகவன் மீண்டும், “எனக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் வெரிகோஸ் வெயின் பிரச்னைகள் இருக்கின்றன.” என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY