மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவரின் சகோதரர் இக்ராகிம் கேஷ்கர் பில்டர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இக்பால் கேஷ்கரின் மைத்துனர் நிஹல் கான் மும்பை பைகுலாவில் வசித்து வருகிறார். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜலலாபாத்தில் நடக்கும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். முதலில் அவர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் விமானத்தை தவறவிட்டதால் காரில் திருமணத்திற்கு சென்றார். திருமணம் முடிந்த நிலையில் இரவில் திருமண வரவேற்பு நடந்தது. இதில் நிஹல் கானுக்கும் அவரது உறவினர் கமில் கானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கமில் கான் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நிஹல் கானை சுட்டு விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்றுவிட்டார். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் மத்தியில் இத்துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நிஹல் கான் உயிரிழந்தார்.
நிஹல் கான் கடந்த 2016-ம் ஆண்டு கமில் கானின் சகோதரர் மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. 15 நாட்களுக்கு பிறகு அவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் பின்னர் சமரசம் செய்யப்பட்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கமில்கான் சகோதரர சஹீல் கான் தற்போது ஜலலாபாத் நகராட்சி தலைவராக இருக்கிறார்.
இத்துப்பாக்கிச்சூடு குறித்து சஹீல் கான் அளித்த பேட்டியில், ”2016ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்காக கமில் கான் இன்னும் கோபத்தில் இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. திருமணத்தில் நிஹல் கான் கலந்து கொள்ள வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் துப்பாக்கியுடன் சென்று இருக்கிறார். திருமணம் முடியும் வரை காத்திருந்து இக்காரியத்தை செய்துள்ளார். முன்கூட்டியே எங்களுக்கு இது தெரிந்திருந்தால் தடுத்து இருப்போம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY