அடையாறு நதி சீரமைப்புக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ரூ.13,700 கோடி ஒதுக்கீடு.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ரூ.13,700 கோடி ஒதுக்கீடு.
8 லட்சம் கான்கிரீட் வீடுகள்…
முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம். இந்தத் திட்டத்துக்கு 3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். ஒவ்வொரு கான்கிரீட் வீட்டுக்கும் 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே பணம் செலுத்தப்படும்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இத்திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும். மேலும் ஏரிகள் சீரமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… 500 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ரூ.500 கோடியில் 5000 நீர்நிலைகள் புரனமைக்க உள்ளன.
ஐந்து லட்சம் லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையில் இருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்.
சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் இடம்பெற ஏற்பாடு.
கிராம சாலை மேம்பாட்டிற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
2,000 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு
அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு…
மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
அகழாய்வுக்கு அதிகத் தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு. கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட்
பட்ஜெட் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.