கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய ‘பிக்பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சியின் ‘Bigg Boss 7 Grand Finale’ இன்று இரவு நடைபெற்றது.

இதில் அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் இருக்க விஷ்ணு, தினேஷ் இருவரும் எவிட்டாகியுள்ளனர். வீட்டிலிருந்து வெளியேறிய விஷ்ணு, “மக்கள் மனதில் நான் இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றிப் பரிசு போனாலும், மக்களிடம் கிடைத்த அன்புப் பரிசு போதும்” என்றார். அவருக்கு ‘competitive contestant’ என்ற விருதும் வழங்கப்பட்டது.

விஷ்ணு

இதையடுத்து வெளியேறிய தினேஷ், “இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் நிறைய விமர்சனங்கள் வந்திருக்கு. அதை உடைத்தெறியும் வகையில் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. மக்கள் கொடுத்த அன்பிற்கு மிக்க மிக்க நன்றி” என்றார்.அவருக்கு ‘Game changer’ என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு கன்டஸ்டன்ட்டாகக் களமிறங்கிய தினேஷ் இறுதிப் போட்டியில் வென்றதும் கோப்பையைத் தன் மனைவி ரக்சிதாவிடம் கொடுக்க வேண்டும் எனப் பலமுறை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று எவிக்டானதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

தினேஷ் , விஷ்ணு இருவரின் எவிக்சன் குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.