பல சமூக ஊடக வலைதளங்கள் இருந்தாலும் வாட்ஸ்- அப்தான் முன்னணி தளமாக உள்ளது.
வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் இல்லாமல், புகைப்படங்களை அனுப்புவது, வீடியோ கால் வசதி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் எனப் பல வசதிகளை வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்து வருகிறது. மெட்டா குழுமத்திற்குக் கீழ் செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் பாதுகாப்பு கருதி விதிமுறைகளை மீறும் சந்தேகத்திற்குரிய கணக்குகளைத் தடை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் நவம்பர் ( 2023) மாதத்தில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட 8,841 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளதாகவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் 71 லட்சம் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளதாகவும் மெட்டா நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. இதில் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளது.