ஜனவரி மாதத்தில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பட்டம் விடுவது அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். பட்டம் விடும் போது அதன் கயிறு பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பறவைகள் உயிரிழப்பது வழக்கம். சில நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது மாஞ்சா கயிறு பட்டு மனிதர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. மும்பை தீன்தோஷி போலீஸ் நிலையத்தில் சமீர் ஜாதவ்(37) என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். அவர் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சாந்தாகுரூஸ் வகோலா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாஞ்சா கயிறு சமீர் கழுத்தில் பட்டு சுற்றிக்கொண்டது. இதனால் நிலை தடுமாறி சமீர் கீழே விழுந்தார்.

அவரை அருகில் இருந்த பீட் மார்ஷல் போலீஸார், உடனே சயான் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். போலீஸார் சமீரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. ஒர்லியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் சமீருக்கு 7 வயதிற்குள் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீர் உயிரிழப்புக்கு காரணமான மாஞ்சா கயிறு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி தீக்‌ஷித் கூறுகையில், ”மாஞ்சா கயிறு சீனாவை சேர்ந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சமீர் உயிரிழப்புக்கு மாஞ்சா கயிறு காரணமா அல்லது வேறு எதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார். சீனாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் சட்டவிரோதமாக மாஞ்சா கயிறு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.