டெல்லி நிஜாமுதீன் பஸ்தி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக சுற்றித்திரிந்த 16 – 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களை காவல்துறை 21-ம் தேதி இரவு பிடித்து விசாரித்திருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அவர்கள் தெரிவித்ததும், அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நிஜாமுதீன் பகுதியைச் சேர்ந்த அசாத் (25) என்பவனைக் கொலை செய்துவிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவர்கள்.

கொலை

இதைக் கேட்டு அதிர்ந்த காவல்துறை, அது தொடர்பாக விசாரித்தது. அப்போது, “எங்களில் ஒருவனுக்கு அசாத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தான். பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அவனைப் பழிவாங்க நினைத்தோம். அதனால், திட்டமிட்டு அவனை, கத்தியால் குத்தி, கற்களாலும், கட்டையாலும் அடித்துக் கொலை செய்தோம். அவனது உடலை, பஸ்தி பார்க் அருகில், காய்ந்த புல், துணிகளை வைத்து எரித்துவிட்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

உடனே, குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, பாதி எரிந்த நிலையில், அசாத் உடலைக் கைப்பற்றியிருக்கிறது. மேலும், அந்த உடலைப் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.

கைது

இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய காவல்துறை,”சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் இந்த கொலையைச் செய்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தில் சிறுவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.