அமெரிக்காவில் 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தார். அதன் பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றமும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றமும் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன.
இது தொடர்பான வழக்கின் விசாரணை கொலராடோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “அமெரிக்காவில் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் அரிதாகப் பயன்படுத்தப்படும் விதியின்கீழ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியற்றவராகக் கருதப்படுகிறார்.
அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவி வகித்த ஒருவர், அதிபர் தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்படுவது, இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்பு கொலராடோவில் மார்ச் 5-ல் நடைபெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.