ஜனவரி 5-ம் தேதி வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் இதோ உங்களுக்காக…

சக்தி விகடனில் மாதந்தோறும் இரண்டு திருவிளக்கு பூஜைகளைப் புகழ்பெற்ற ஆலயங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் ஜனவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்குக் குறைகள் தீர்க்கும் செவ்வாய் ஸ்தலமாகத் திகழும் வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது.

விளக்கு பூஜை

ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் வீற்றிருக்கும் இக்கோயில் செவ்வாய் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தின் கரையில் செவ்வாய் அமைந்திருப்பதால் இது செவ்வாய் கோயில் என்றும் போற்றப்படுகிறது. பொதுவாக கிழக்கே ராஜகோபுரம் அமைந்து இருப்பதே கோயில்களின் வழக்கம். ஆனால் திருப்பெருந்துறை போல இங்கே ஆலய வாயில் தெற்கே அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள சிவன் குருவின் அம்சமாகவும் உள்ளார்.

இங்குள்ள அகஸ்தீஸ்வரர், அம்பிகையுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியருளியதால் இது திருமணப் பரிகாரத் தலமாகவும் சிறப்பிக்கப்படுகிறது. வாதாபி, வில்வலன் என்ற இரு அரக்க சகோதரர்களை அகத்தியர் தண்டித்தார். வாதாபியை அழித்த அகத்தியர், வில்வலனுக்கு நல்வழி புகட்டி திருத்தினார். வில்வலன் திருந்தி இங்கு சிவபூசை செய்ததால் இந்த ஊர் வில்லிவாக்கம் என்றானதாக புராணம் கூறும். அங்காரகன் என்ற செவ்வாயால் உலகுக்கு தீமைகள் உண்டாகும் என அறிந்த ரிஷிகள் கூடி பெரும் யாகம் செய்தனர். இதில் தோன்றிய பூதம் ஒன்று அங்காரகனைப் பிடித்துக் கொண்டது. அதை விரட்ட இந்த ஊரில் சிவலிங்க பூஜை செய்து தீர்த்தம் ஒன்று உருவாக்கி அங்காரகன் வழிபட்டார்.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கப் பெறுவர். வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் யோகம் பெறுவர். அமாவாசையில் இங்கு வழிபட சத்ரு பயமின்றி இருக்கலாம். பவுர்ணமியில் வழிபட சகல சம்பத்துக்களும் பெறலாம்.

விளக்கு பூஜை

கொடிய பாவிகளும் இங்கு வந்தால் திருந்தி புண்ணியவான் ஆகிவிடுவார்கள் என்கிறது தலபுராணம். மார்க்கண்டேய ரிஷி அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி தலங்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள வீரபத்திரர் குபேரனுக்குரிய வடதிசையில் வீற்றிருப்பதால் ‘ஐஸ்வர்ய வீரபத்திரர்’ என்று போற்றப்படுகிறார். இவரை வழிபட ஐஸ்வர்யங்கள் பெருகும்.

இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். ‘திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; ஈசனின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைவாக இருக்கிறவர்கள் மற்றும், திருமணத்தடை உள்ள ராசிக்காரர்கள் இங்கு வந்து விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாயின் சாதகமற்ற தன்மை குறைந்து நற்பலன்கள் மிகுதியாகும். வியாபாரம் தொழிலில் தேக்கம் கண்டோர்கள் இங்கு வந்து வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

விளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.