புதுக்கோட்டையை பூர்விகமாக கொண்டவர் ரத்தினம். அரசுப் பணியில் இருந்தவர், புதுக்கோட்டை ராமசந்திரன் மூலம் மணல் வியாபாரம், ரியல் எஸ்டேட் தொழிலில் களம் இறங்கினார். தற்போது தமிழகம் முழுவதும் செங்கல் சூளை, கிரஷர் ஆலை, ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 23 தொழில்களை நடத்தி வருகிறார். அதில் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
கடந்த 2016 -ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பின் போது சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததாகவும், பல கோடி ரூபாயை மாற்றியதாவும் கூறி ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினத்தின் 2 வீடுகள் மற்றும் அருகே உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீஸார் உதவியுடன் அமலாக்கத்துறையினர் 24 மணி நேர சோதனையில் ஈடுபட்டனர். அதேவேளையில் மற்றொரு குழுவினர் ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீட்டிலும் சோதனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனை மதியம் 1 மணி அளவில் முடிந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, `ஏற்கெனவே அமலாக்கத்துறை சோதனைக்கு வந்தபோது வீட்டில் இருந்த ரத்தினம் இல்லை. இப்போதும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு வந்தபோது தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இல்லை. அவரின் மனைவியிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். சோதனை முடித்துவிட்டு ரெத்தினத்தை விசாரிக்க சம்மன் வழங்கிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது’ என்றனர். அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.