ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி வாணி(வயது 38). இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று முந்தினம் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக வரகுணராமபுரம் பகுதி குடியிருப்புகளுக்கு அதிக அழுத்தத்தில் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்து வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில்(பிரிட்ஜ்) மின்கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையறியாத வாணி, நேற்று காலையில்(22-ந்தேதி) தேநீர் தயாரிக்க பால் எடுப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியை திறந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் வாணி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

பிரிட்ஜ் (Fridge)

இந்த மின் விபத்தில், படுகாயமடைந்த வாணியை, குடும்ப உறுப்பினர்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வாணி, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து, அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக, கீழராஜகுலராமன் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீஸார், வாணியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.