தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சினேகா தம்பதிக்கு ஒரு மாதம் முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றுக் காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என போலீஸாரிடம் புகார் அளித்தனர். பின்னர், அந்த குழந்தை தண்ணீர் நிரம்பியிருந்த 20 லிட்டர் பால் கேனில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தை கொலை செய்யப்பட்டு கேனில் போடப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கம்பம் போலீஸாரிடம் விசாரித்தோம். `கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்த சௌந்தரவேல், பாண்டீஸ்வரி தம்பதியரின் மகள் சினேகா. இவருக்கு மணிகண்டன் என்பவருக்கு கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து தற்போது சினேகா தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்துள்ளார். சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்து, பாட்டி பாண்டீஸ்வரி பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சினேகா சென்றுள்ளார். அப்போது யாரோ குழந்தையை கடத்தி செல்வதாக வீட்டில் உள்ளவர்கள் கூச்சல் எழுப்ப, அதை தொடர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். பிறகு கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். அதனடிப்படையில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டோம். விசாரணையில் குடுகுடுப்பை காரர் மீது சந்தேகம் இருப்பதாக குழந்தையின் உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்து கொண்டிருந்தோம்.
இதற்கிடையே சினேகாவின் வீட்டில் உள்ள 20 லிட்டர் பால் கேனில் குழந்தை சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. குழந்தை சடலத்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
கம்பத்தில் ஆண் குழந்தை பால் கேனில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.